Nov 25, 2010

நீ
சொல்ல
மறந்ததை
எல்லாம்
உன்
மொவுனங்கள்
என்னோடு
பேசுகின்றன...!

Nov 23, 2010

என்
இரவுகளை
கேட்டுப்பார்
உன்மேல்
நான்
வைத்திருக்கும்
அன்பின்
ஆழம்
உனக்கு
புரியும்.....

Nov 21, 2010

எப்படி
மாற்றினாய்
உன்
இதயத்தை
கல்லாக
தயவு
செய்து
எனக்கும்
கற்றுக்கொடு?...

Nov 19, 2010

கடற்கரை
மணலில்
கூட
நம்
இருவர்
பெயரையும்
ஒன்றாக
எழுதமுடியவில்லை?
அழித்துவிடுகின்றன
அலைகள்....

Nov 15, 2010

உன்னோடு
அழுவதற்கு
என்
கண்களில்
கண்ணீர்
இல்லையென்றாலும்...
நீ
அழுகின்றபோது
துடைப்பதற்கு
என்னிடம்
விரல்கள்
இருக்கின்றன....

Nov 14, 2010

உன்
காதோடு
சொல்வதற்காய்
மட்டும்...
கோடி கணக்கான
இரகசியங்களை
மறைத்து
வைத்துயிருக்கிறேன்....

Nov 11, 2010

உன்னை
முதன் முதலில்
புடவையில்
பார்த்ததும்
புரிந்ததடி...
ஷாஜஹான்
தாஜ்மஹால்
கட்டியதற்கான
காரணம்...